தனிமைப்படுத்தலில் இருந்து புறக்கோட்டை நாளை அதிகாலை விடுவிக்கப்படுகின்ற போதிலும் பழைய மெனிங் சந்தையில் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி இன்று காலையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டை 04 மற்றும் 05ம் குறுக்கு வீதிகள் உள்ளிட்ட பழைய மெனிங் சந்தையிலும் வர்ததக நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு